Home முக்கியச் செய்திகள் கொடுக்கல் வாங்கல் சிக்கல்: யாழ் குடும்பஸ்தர் எடுத்த முடிவு

கொடுக்கல் வாங்கல் சிக்கல்: யாழ் குடும்பஸ்தர் எடுத்த முடிவு

0

யாழில் (Jaffna) குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (30) இடம்பெற்றுள்ளது.

கோப்பாய் – கட்டைப்பிராய் பகுதியைச் சேர்ந்த சுந்தரம் கோணேஸ்வரன் (வயது 66) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மரண விசாரணை

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த நபருக்கு கொடுக்கல் வாங்கல் பிரச்சினை இருந்துள்ளது.

இந்நிலையில் மனவிரக்தியால் தவறான முடிவெடுத்து நேற்றையதினம் உயிர் மாய்த்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்ட நிலையில், சாட்சிகளை கோப்பாய் காவல்துறையினர் நெறிப்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version