Home இலங்கை அரசியல் யாழ். பலாலி வீதி இரவு ஏழு மணி வரை திறப்பு

யாழ். பலாலி வீதி இரவு ஏழு மணி வரை திறப்பு

0

யாழ்ப்பாணம் பலாலி வீதி போக்குவரத்திற்காக காலை 6 மணி முதல் மாலை ஏழு மணி வரை
நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் க.இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை குறித்த வீதியில் பயணம்
செய்வதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தது.

மக்கள் விடுத்த கோரிக்கை

அதன்பிறகு, நேரத்தை மாலை 7 மணி வரை நீடித்து தர வேணடும் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரனிடம் மக்கள் விடுத்த கோரிக்கையை அடுத்து, இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம்
கோரிக்கை முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இராணுவ அதிகாரியிடம் கலந்துரையாடப்பட்டு
வீதியின் போக்குவரத்து மாலை 7 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version