Home இலங்கை சமூகம் யாழ். மாவட்ட செயலகத்தில் மூன்றாம் காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

யாழ். மாவட்ட செயலகத்தில் மூன்றாம் காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம்

0

மூன்றாம் காலாண்டிற்கான நிதி முன்னேற்ற மீளாய்வுக் கூட்டமானது யாழ். மாவட்ட அரசாங்க
அதிபரும் மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நேற்றைய தினம் (16.10.2024) கூட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர், “இக் கூட்டத்தின்
நோக்கமானது நிதி முகாமைத்துவம் மற்றும் கட்டுப்பாடுகள் சரியான முறையில்
பின்பற்றப்படுகின்றதா என்பதனை ஆராய வேண்டும்.

நிதி முன்னேற்றங்கள்

மேலும் அதற்கான நிதி முன்னேற்றங்கள் மீளாய்வு
செய்யப்படும்.

குறித்த மீளாய்வுக் கூட்டத்தில் நிதி
முன்னேற்றங்களை ஆராய்ந்தவகையில் திருப்திகரமாக உள்ளது’’ என தெரிவித்துள்ளார்.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), திட்டமிடல் பணிப்பாளர்,
பிரதம பொறியியலாளர், கணக்காளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும்
உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டடை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version