Home இலங்கை குற்றம் யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு..!

யாழில் இளைஞர் மீது வாள்வெட்டு..!

0

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலட்டி பகுதியில் இளைஞரொருவர் மீது  கயஸ் வாகனத்தில் வந்த இருவர் வாள் தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவமானது இன்று (08) காலை 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வாள்வெட்டு

மோட்டார் சைக்கிள் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் மீது  வாள் தாக்குதலை மேற்கோண்டுள்ளனர்.

சம்பவத்தில் காயம் அடைந்த 35 வயதுடைய யாழ் கொக்குவில் பகுதியை சேர்ந்த இளைஞர்
சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வாள் வெட்டு சம்வத்திற்கான காரணம் இரு தரப்புக்கு இடையே காணப்பட்ட முற்பகையே
என  பொலிஸார் சந்தேகம் வெளியிடுகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார்  மேற்கொண்டு
வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version