Home முக்கியச் செய்திகள் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

0

யாழ். போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) வீதி விபத்துக்கள் காரணமாக அவசர சிகிச்சைப் பிரிவுகளில்
அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை யாழ். போதனா
வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி (Dr T. Satyamurthi) தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்
இதனை குறிப்பிட்டுள்ளார்.

வீதி விபத்துக்கள்

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர்
கந்தையா மணிதீபன், நரம்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் பொன்னம்பலம் ஆதித்தன், அதிதீவிர சிகிச்சைப் பிரிவு வைத்திய நிபுணர் முத்துலிங்கம் நவநீதன், விபத்து
மற்றும் அவசர சிகிச்சைப்பிரின் வைத்திய நிபுணர் இராசு இளங்கோ ஆகியோரும் கருத்துத் தெரிவித்தனர்.

இதேவேளை, கடந்த சில நாட்களாக யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் பல்வேறு சிக்கல் நிலைமைகள் நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version