Home இலங்கை சமூகம் யாழ் – நாகை கப்பல் சேவை : வெளியான அறிவிப்பு!

யாழ் – நாகை கப்பல் சேவை : வெளியான அறிவிப்பு!

0

காங்கேசன்துறை (Kankesanturai) – நாகபட்டினம் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவையானது  நாளை மறுதினம் (12.02.2025) தனது சேவையினை ஆரம்பிக்கவுள்ளது.

சிவகங்கை கப்பல் சேவை 

சிவகங்கை கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் சுந்தரராஜ் பொன்னுசாமி இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன் படி  நாளை மறுதினம் காலை 7.30 அளவில் நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் கப்பலானது காங்கேசன்துறையை வந்தடைந்த பின்னர் மீண்டும் பி.ப 1.30 அளவில் காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்து நாகபட்டினத்தை சென்றடையும்.

இந்த கப்பல் சேவையானது செவ்வாய் கிழமை தவிர்ந்து வாரத்திற்கு 6 நாட்கள் ஈடுபடும் என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

NO COMMENTS

Exit mobile version