Home இலங்கை சமூகம் கோர விபத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து: 30 பேர் படுகாயம்

கோர விபத்தில் சிக்கிய யாழில் இருந்து சென்ற பேருந்து: 30 பேர் படுகாயம்

0

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று மூதூர் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கங்கை பாலத்துக்கு அருகில் உள்ள பள்ளத்தில் புரண்டு இந்த பேருந்து விபத்துக்குள்ளானதாக கூறப்படுகின்றது.

விபத்து

இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகச் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே குறித்த பேருந்து தடம்புரண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் மூதூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

https://www.youtube.com/embed/3hbPOG7GKQk

Source: https://ibctamil.com/article/jaffna-to-katharagama-bus-accident-today-1721396791

NO COMMENTS

Exit mobile version