Home இலங்கை சமூகம் யாழ். பல்கலை வளாகத்தில் காவலுக்கு இருந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

யாழ். பல்கலை வளாகத்தில் காவலுக்கு இருந்தவர் மர்மமான முறையில் உயிரிழப்பு

0

கிளிநொச்சி அறிவியல் நகர் யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு கடமையில்
இருந்த காவலர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக விவசாய பீட வளாகத்தில்
பாதுகாப்பு கடமையில் இருந்த தர்மசீலன் ரகுராஜ் 34 வயதுடைய காவலர் ஒருவர்
உயிரிழந்துள்ளார்.

தவறி விழுந்து 

குறித்த பாதுகாவலர் விவசாய பீடத்தின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்து மரணம் ஏற்பட்டிருக்கலாம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது என்று
கிளிநாச்சி மாவட்ட தடவியல் பொலிஸ் உத்தியோத்தர்கள் தெரிவித்துள்ளார்கள்.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிபதி, சம்பவ இடத்துக்கு நேரில் சென்று
பார்வையிட்டதின் பின்னர் சடலம் உடல்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி மாவட்ட பொது
வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version