இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung) யாழ்ப்பாணம் சென்றிருந்த போது தமிழரசுக்கட்சியின் மூன்று உறுப்பினர்களையும் ஒரே நேரத்தில் சந்தித்த நிலையில் மூவரும் மூன்று நிலைப்பாடுகளை கொண்டுள்ளதாக தெரிவித்ததாக இலங்கையிலுள்ள மூத்த நிர்வாக சேவை அதிகாரி செல்வின் இரேணியஸ் தெரிவித்துள்ளார்.
அதாவது அனைவரும் ஒரு நிலைப்பாட்டினை கொண்டவர்களாக காணப்படும் பட்சத்தில் மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு அமையும் என்றும் கூறியுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,