Home இலங்கை அரசியல் முத்தரப்பு கலந்துரையாடலுக்கு தயாராகும் இந்தியா: இலங்கை வரவுள்ளார் ஜெய்சங்கர்

முத்தரப்பு கலந்துரையாடலுக்கு தயாராகும் இந்தியா: இலங்கை வரவுள்ளார் ஜெய்சங்கர்

0

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் நாளைமறுதினம் இலங்கை வரவுள்ளார் என இராஜதந்திர வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பின்னர் புதிய அரசு அமைந்துள்ள
நிலையில், இந்நாட்டுக்கு வரும் முதலாவது வெளிநாட்டு இராஜதந்திரி இவராவார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார
அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட புதிய அரச தரப்பினருடன் கலந்துரையாடவுள்ளார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் 

மேலும், தமிழ், முஸ்லிம்
கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடனும் மற்றும் சிவில் சமூகத்தினருடனும்
இந்திய வெளிவிவகார அமைச்சர் பேச்சு நடத்தவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது டெல்லி வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்
அழைப்பை, ஜனாதிபதி அநுரகுமாரவிடம் ஜெய்சங்கர் கையளிக்கவுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version