ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக, தூதுவர் ஜெயந்த ஜெயசூரிய அதிகாரப்பூர்வமாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்.
நிவ்யோர்கில் நடைபெற்ற முறையான நிகழ்வில், ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர்
அன்டோனியோ குட்டெரெஸிடம் தனது நற்சான்றிதழ்களை வழங்கி, அவர் தமது
பொறுப்புக்களை ஏற்றார்.
இதன்போது, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதன் நிறுவனங்களுடன் நெருக்கமாக
பணியாற்றுவதற்கான இலங்கையின் உறுதிப்பாட்டை மீண்டும் அவர் உறுதிப்படுத்தினார்.
இருதரப்பு கலந்துரையாடல்
நற்சான்றிதழ் வழங்கலைத் தொடர்ந்து, பொதுச் செயலாளரும், தூதுவர் ஜெயசூரியவும்
இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
