Home இலங்கை அரசியல் ஜோ பைடனுக்கு அநுர கூறியுள்ள செய்தி

ஜோ பைடனுக்கு அநுர கூறியுள்ள செய்தி

0

எனது தலைமையில் இலங்கை அமெரிக்காவுடன் நெருக்கமாக செயற்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனிடம் தெரிவித்துள்ளார்.

‘X’ தளத்தில் ஜோ பைடனின் வாழ்த்து செய்திக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அமெரிக்கா உடனான நீண்டகால நட்பை பலப்படுத்தும் விதமாக செயற்பட உள்ளதாக அநுர உறுதியளித்துள்ளார்.

இந்தோ – பசுபிக்

இந்தோ – பசுபிக் பகுதியில் அமைதி, பாதுகாப்பு மற்றும் செழிப்பை மேம்படுத்துவதற்காக இணைந்து செயற்பட விரும்புவதாக ஜோ பைடன் தனது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

அதற்கும், அநுர குமார திஸாநாயக்க தனது பதிவில் இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version