Home இலங்கை அரசியல் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த ஜே.ஆர் ஜயவர்தனவின் பேரன்

ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த ஜே.ஆர் ஜயவர்தனவின் பேரன்

0

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட முதலாவது அதிபர் ஜே.ஆர் ஜயவர்தனவின் (J. R. Jayewardene) பேரனான பிரதீப் ஜயவர்தன (Pradeep Jayewardene) ஐக்கிய மக்கள் சக்தியோடு (SJB) இணைந்து கொண்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் (Sajith Premadasa) அரசியல் பயணத்திற்கு தனது ஆதரவை நல்கும் நோக்கில் இவர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்ட பிரதீப் ஜயவர்தனவை கட்சியின் கம்பஹா மாவட்ட அமைப்பாளராக சஜித் பிரேமதாச நியமித்துள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 

சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (SLFP) கொழும்பு (Colombo) கிழக்கு தேர்தல் தொகுதி அமைப்பாளராகவும், மத்திய குழு உறுப்பினராகவும் பிரதீப் ஜயவர்தன பணியாற்றியுள்ளார்.

சுதந்திரக் கட்சி ஊடாக 2015 ஆம் ஆண்டு கம்பஹா (Gampaha) மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அரசியலில் பிரவேசித்த இவர், 2017 இல் நடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவானார்.

இதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (04) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலும் இவர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version