Home இலங்கை அரசியல் முகத்தை மாற்றி ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி: விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

முகத்தை மாற்றி ஆட்சிக்கு வந்துள்ள ஜே.வி.பி: விமல் வீரவன்ச சுட்டிக்காட்டு

0

தேசிய மக்கள் சக்தியாக (NPP) தற்போது ஆட்சியை பிடித்துள்ள மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) வளர்ச்சியடைந்துள்ளதுடன், ஜேவிபிக்கும் என்பிபிக்கும் இடையிலான வேறுபாடு தெளிவாகத் தெரிகிறது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச(wimal weerawansa) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த வீரவன்ச, நாட்டை முன்னேற்றுவதற்கு தேசிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

ஜே.வி.பி எனது முன்னாள் கட்சி

“ஜே.வி.பி எனது முன்னாள் கட்சியாக இருந்ததால், தற்போதைய அரசாங்கத்தின் தேசத்தை உயர்த்துவதற்கான முயற்சிகளுக்கு எமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை” என்று அவர் கூறினார்.

அரசின் உண்மையான முகம் விரைவில் தெரியவரும்

கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) நிர்வாகத்தில் காணப்படுவது போல் ஒவ்வொரு புதிய அரசாங்கமும் தேனிலவு காலத்தை அனுபவிக்கிறது, ஆனால் அரசாங்கத்தின் உண்மையான தன்மை காலப்போக்கில் வெளிப்படும் என்றும் அவர் கூறினார்.

Source: https://ibctamil.com/article/jvp-has-come-to-power-with-face-of-npp-1727704233

NO COMMENTS

Exit mobile version