Home இலங்கை அரசியல் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கை

0

Courtesy: சதீஸ்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றைய தினம் தபால் மூல வாக்களிப்பு நடவடிக்கைகள்
மும்முரமாக நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பின் பட்டிருப்பு ,கல்குடா ,மட்டக்களப்பு ஆகிய மூன்று
தேர்தல் தொகுதிகளுக்கான தபால்மூல வாக்களிக்கும் பணிகள் இன்று காலை முதல்
நடைபெற்றுவருகின்றன.

 கல்குடா தேர்தல் தொகுதியில் 134,104 வாக்காளர்களும்
மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 210,293 வாக்காளர்களும் பட்டிருப்பு தேர்தல்
தொகுதியில் 105,289 வாக்காளர்களும் வாக்களிக்க தபால் மூலம் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

தபால்மூல வாக்களிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் 12 பொலிஸ் நிலையங்களிலும் பிரதான பொலிஸ்
நிலையங்களிலும இன்று காலை 8.30 மணியளவில் ஆரம்பமான தபால்மூல வாக்களிப்பு
தற்போது மிகவும் சுமுகமாக நடைபெற்று வருகிறது.

உதவி தெரிவத்தாட்சி அலுவலர் மேற்பார்வையின் கீழ் தபால் மூல வாக்களிப்பு பொலிஸ்
நிலையங்;களில் இடம்பெற்று வருவதுடன்
பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் பொலிஸ் உத்தியோகத்தர் உள்ளிட்டோர்
வாக்களித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பொலிஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் கட்சிகள்
சார்பில் பிரதி நிதிகளும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version