Home இலங்கை அரசியல் மாம்பழத்துடன் மாவையை சந்தித்த தவராசா அணி

மாம்பழத்துடன் மாவையை சந்தித்த தவராசா அணி

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கியுள்ள ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா (KV Thavarasha) தலைமையிலான வேட்பாளர்கள் சிலருக்ககும் முன்னாள் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவிற்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பானது யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள மாவை சேனாதிராஜாவின் இல்லத்தில் நேற்றையதினம் (11.10.2024) நடைபெற்றுள்ளது.

தமிழரசுக் கட்சி

இதன்போது “மாம்பழம் சின்னத்தில்” போட்டியிடும் வேட்பாளர்கள் மாவை சேனாதிராஜாவிற்கு மாம்பழத்தினை வழங்கிவைத்துள்ளனர்.

குறித்த சந்திப்பில் ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா, தமிழரசுக் கட்சியினைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவனபவண், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஜங்கரநேசன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் தமிழரசுக்கட்சி பொதுநலனுக்கான வீட்டு சின்னமல்ல அது தனிப்பட்ட நபரின் தனியார் நிறுவனம் என சட்டத்தரணி தவராசா (KV. Thavarasha) நேற்றையதினம் சுட்டிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version