Home இலங்கை அரசியல் சிச்சியின் ரொக்கெட் விவகாரம்: உண்மைகளை அம்பலப்படுத்தும் கம்மன்பில

சிச்சியின் ரொக்கெட் விவகாரம்: உண்மைகளை அம்பலப்படுத்தும் கம்மன்பில

0

சிச்சியின் செய்மதி தொடர்பில் ITU (International Telecommunication Union) தகவல்களை மேற்கோள் காட்டி குறிப்பிட்ட கருத்துக்கள் பொய்யானது என பிவித்துரு ஹெல உறுமய கட்சித் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “அமைச்சர் நளிந்தவால் கண்டுபிடிக்க முடியாத சுப்ரீம் சாட் செய்மதியை ஐக்கிய நாடுகள் சபை கண்டுபிடித்துள்ளது.

சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் அல்லது ITU-வை தனது ஆதாரமாகக் குறிப்பிட்ட அமைச்சர், செயற்கைக்கோள்களைக் கையாளும் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனம் என்று அழைத்தார்.

செயற்கைக் கோள்

முதலாவதாக, ITU செயற்கைக் கோள்களைக் கையாளும் ஐக்கிய நாடுகள் சபையின் நிறுவனம் அல்ல.

இது சர்வதேச தொழில்நுட்ப தரநிலைகளை அமைப்பதோடு உலகளாவிய அதிர்வெண்களை ஒழுங்குபடுத்துகின்றது.

செயற்கைக்கோள் ஏவுதல்களைக் கையாளும் ஒரு தனி ஐக்கிய நாடுகள் சபை நிறுவனம் (United Nations Office for Outer Space Affairs) உள்ளது.

ஐக்கிய நாடுகள் 

இது வெளி விண்வெளி விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் என்று அழைக்கப்படுகிறது, இது ஒரு சர்வதேச ஒப்பந்தத்தின் ஊடாக உருவாக்கப்பட்டது.

சுப்ரீம் சாட் என்ற செயற்கைக்கோள் இல்லை என்று அமைச்சர் நளிந்த நம்பிக்கையுடன் கூறிய போதிலும், அதை நிரூபிக்க எந்த ஆதாரத்தையும் அவர் முன்வைக்கவில்லை.

அவர் சுப்ரீம் சாட் செயற்கைக்கோளின் இருப்பிடத்தை ஆதாரங்களுடன் காட்டினார்.

பிரதமரின் அறிவிப்பு 

பிரதமரின் அறிவிப்பு வெளியான ஒரு நாளுக்குள், பிரதமர் பொய் சொன்னதாக அமைச்சர் வசந்த கூறினார்.

அந்த அறிவிப்புக்குப் பிறகு நான்கு நாட்களுக்குப் பிறகு, அமைச்சர் வசந்த பொய் சொன்னதாக அமைச்சர் நளின் கூறினார்.

அமைச்சர் நளினின் அறிக்கைக்கு ஆறு நாட்களுக்குப் பிறகு, அமைச்சர் நளின் பொய் சொன்னதாக நான் சொல்கிறேன்.

இது இப்போது பொய்களின் சுழற்சியாக மாறிவிட்டது முடிந்தால், நான் பொய் சொல்கிறேன் என்பதை நிரூபிக்குமாறு அரசாங்க அமைச்சர்களுக்கு சவால் விடுகிறேன்” என அவர் தெரிவித்துள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் வேல்விமானம் திருவிழா

NO COMMENTS

Exit mobile version