Home இலங்கை சமூகம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை

0

 கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்றைய தினம் பதற்ற நிலைமை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலையத்தின் விமான நிலையமொன்றில் குண்டு காணப்படுவதாக வெளியான தகவல்களினால் இவ்வாறு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

விடுக்கப்படும் மிரட்டல்கள் 

இந்த குண்டுப் பீதி காரணமாக விமான நிலையம் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இந்திய விமானமொன்று இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது,
அண்மைய நாட்களாக இவ்வாறு பல இந்திய விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

இந்த விமானத்தில் 108 பயணிகளும், 8 விமான பணியாளர்களும் பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டு சோதனையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஏற்கனவே இவ்வாறு சில சந்தாப்பங்களில் விமானங்கள் அவசரமாக தரையிறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version