Home முக்கியச் செய்திகள் யாழில் ஆசிரியர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெற்றோர்கள்

யாழில் ஆசிரியர்களின் செயற்பாடுகளுக்கு எதிராக வீதியில் இறங்கிய பெற்றோர்கள்

0

யாழ்ப்பாணம்(Jaffna) –  கோப்பாய் பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் ஆசிரியர்களின் செயற்பாடுகள் தொடர்பில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த போராட்டமானது கோப்பாய், வடக்கு றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு முன்பாக இன்றையதினம்(28) இடம்பெற்றுள்ளது.

கவனயீர்ப்பு போராட்டம்

இதன்போது, ஆசிரியர்களின் அசமந்த போக்கு , பாடசாலை நேரத்தில் ஆசிரியர்கள் தொலைபேசி பாவித்தல், மாணவர்களில் கல்வியில் அக்கறையின்மை உள்ளிட்ட  பல குறைபாடுகளை முன்வைத்து மாணவர்களின் பெற்றோர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோர்கள் வீதியை மறித்து போராடியதால் சிறிதுநேரம் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

எனினும், கோப்பாய் காவல்துறையினரால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version