Home இலங்கை குற்றம் வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்திறங்கிய பெண் விமான நிலையத்தில் கைது

வெளிநாட்டிலிருந்து இலங்கை வந்திறங்கிய பெண் விமான நிலையத்தில் கைது

0

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை (28) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மில்லேவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை

சந்தேகநபர் அபுதாபியிலிருந்து இன்று (28) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போது, விமான நிலைய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேகநபர் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 11,200 ஆயிரம் வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 56 சிகரட் காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

  

NO COMMENTS

Exit mobile version