Home இலங்கை குற்றம் டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கியவர் கைது

டுபாயிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் வந்திறங்கியவர் கைது

0

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகள் மற்றும் இரசாயனங்களை சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டு வந்த விமான பயணி ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14) அதிகாலை சுங்க அதிகாரிகளால் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான சிகரெட்டுகள் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் இரசாயனங்க கைப்பற்றப்பட்டுள்ளன.

தடுத்து வைத்து மேலதிக விசாரணை

கொழும்பு-10 பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகரான இவர், டுபாயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-226 இல் இன்று காலை 05.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version