Home இலங்கை குற்றம் டுபாயில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த பெண் விமான நிலையத்தில் கைது

டுபாயில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வந்த பெண் விமான நிலையத்தில் கைது

0

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுக்களுடன் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் சிலாபம், பிங்கிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய பெண் ஆவார்.

 

பொலிஸ் பிணையில் விடுவிப்பு

சந்தேகநபரான பெண் டுபாயிலிருந்து நேற்றைய தினம் பிற்பகல் 5.15 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

 

இதன்போது, சந்தேகநபர் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 37 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 25,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 125 பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட பெண் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், அவரை எதிர்வரும் 16 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜராகுமாறு விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version