Home முக்கியச் செய்திகள் முன்னாள் அமைச்சர் கெஹலியவின் வீட்டுப்பணிப்பெண் கைது

முன்னாள் அமைச்சர் கெஹலியவின் வீட்டுப்பணிப்பெண் கைது

0

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின்(keheliya rambukwella) வீட்டுப் பணிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 சுகாதார அமைச்சகத்திற்கு பெயரளவு நியமனங்களை வழங்கியதன் மூலம் அரசாங்க சம்பளம் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகளை தவறாகப் பயன்படுத்தியதற்காக இன்று (11) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழுவால் அவர் கைது செய்யப்பட்டார்.

லஞ்ச ஆணைக்குழுவில் முன்னிலையானபோது கைது

குறித்த பணிப்பெண் இன்று (11) லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் முன்னிலையானபோது இந்த கைது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட பெண் எம்பிலிப்பிட்டியவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது..

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

மேலதிக விசாரணை

இந்த சம்பவம் தொடர்பில் லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

NO COMMENTS

Exit mobile version