Home இலங்கை அரசியல் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் போது சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை சொல்ல முடியும்: சிறீதரன்

தமிழ் பொது வேட்பாளரை களமிறக்கும் போது சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை சொல்ல முடியும்: சிறீதரன்

0

18 இலட்சம் தமிழ் மக்களின் வாக்குகள் உள்ள நிலையில் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்
பொது வேட்பாளர் ஒருவரை களம் இறக்கும் போது சர்வதேசத்திற்கு செய்தி ஒன்றை சொல்ல
முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S. Shritharan)தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி(Kilinochchi) –  நாதன் குடியிருப்பு விளையாட்டு மைதானத்தில் நேற்று (28.04.2024) பொது அமைப்புக்களின்
பிரதிநிதிகளை சந்தித்த போதே குறித்த விடயத்தை அவர் கூறியுள்ளார்.

தமிழ் பொது வேட்பாளர்

காலத்திற்கு காலம் ஜனாதிபதி தேர்தலில் பல வேட்பாளர்களுக்கு ஆதரவு வழங்கிய
போதும் சிலர் வெற்றி பெற்றார்கள்.எமக்கு ஒன்றும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களின் அரசியல் கொள்கைக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் தேவை என்பது தனது தனிப்பட்ட கருத்து எனவும்
அவர் தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/kilinochchi-press-meet-speech-shritharan-mp-1714343461

NO COMMENTS

Exit mobile version