Home இலங்கை ஹமாஸ் தலைவர் படுகொலை : இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

ஹமாஸ் தலைவர் படுகொலை : இலங்கையர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து

0

ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியாவின் படுகொலையுடன், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்படும் என ஊகிக்கப்படும் யுத்த மோதல்கள் காரணமாக, நான்கு நாடுகளில் உள்ள முப்பத்தைந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட இலங்கைத் தொழிலாளர்கள் வேலை அபாயத்திற்கு ஆளாகியுள்ளனர். 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி, இஸ்ரேலில் பன்னிரண்டாயிரம், ஜோர்தானில் பதினைந்தாயிரம், லெபனானில் ஏழாயிரத்து ஐநூறு, எகிப்தில் ஐநூறு இலங்கைத் தொழிலாளர்கள் பணிபுரிவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யுத்த மோதல்கள்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் யுத்த மோதல்கள் ஏற்பட்டால், அந்த நாடுகளில் பணிபுரியும் அனைத்து இலங்கையர்களும் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படுவர் எனவும், அவ்வாறான நிலை ஏற்பட்டால், இலங்கை தொழிலாளர்கள் மீண்டும் இலங்கைக்கு அழைத்து வரப்படும் வரை பாதுகாப்பான இடங்கள் மற்றும் அனைத்து வசதிகளும் வழங்கப்படும் என தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ஹமாஸ்  அரசியல் தலைவரின் படுகொலை

ஹமாஸ் அமைப்பின் அரசியல் தலைவரின் படுகொலையை அடுத்து நாட்டில் ஏற்படக்கூடிய பாதுகாப்பு மற்றும் பொருளாதார பாதிப்புகளுக்கான பூர்வாங்க ஆயத்தமாக தேசிய பாதுகாப்பு தொடர்பான குழுவொன்றையும், பொருளாதாரம் தொடர்பான குழுவொன்றையும், இரண்டு குழுக்களின் செயற்பாடுகளை மேற்பார்வையிட உயர்மட்டக் குழுவையும் ஜனாதிபதி நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

Source: https://ibctamil.com/article/killing-hamas-leader-sri-lankans-are-in-danger-1722701347

NO COMMENTS

Exit mobile version