கிளப் வசந்த எனப்படும் வர்த்தகர் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலை தொடர்பில் 21 வயதுடைய யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8 ஆம் திகதி அத்துருகிரியவில் வைத்து கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா சுட்டுக் கொல்லப்பட்டார்.
இதனடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட காவல்துறையினர் 7 சந்தேகநபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய பின்னர் ஜூலை 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நீண்ட விசாரணை
சம்பவம் தொடர்பான நீண்ட விசாரணையின் பின்னர், கொலையுடன் தொடர்புடைய, 21 வயதுடைய யுவதியொருவர் அத்துருகிரிய பகுதியில் வைத்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டார்.
கைதான யுவதி நேற்று (21) கடுவலை நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, காவல்துறையினரின் கோரிக்கைக்கு அமைய, அவரை 48 மணிநேரம் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதவான் அனுமதியளித்துள்ளார்.
இதற்கமைய, சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.