கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் அமைக்கப்பட்டுள்ள கொங்ரீட் பாதையில் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக வெளியாகிய செய்திகள் தொடர்பில் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த விளக்கமளித்துள்ளார்.
குறித்த பகுதிக்கு விஜயம் செய்த காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த கொத்மலை அணைக்கட்டின் நிலவரம் தொடர்பில் குறித்த விளக்கத்தை வழங்கியுள்ளார்.
கொத்மலை அணைக்கட்டுக்கு மேல் பகுதியில் அமைந்துள்ள மலைத் தொடரில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மலைத் தொடரில் இதற்கு முன்னர் வெடிப்புகள் இருக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
பெரும் அச்சம்
இது தொடர்பில் கட்டிட ஆராச்சி திணைக்களம் (NBRO)ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது என்றும் கூறியுள்ளார்.
கொத்மலை அணைக்கட்டுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அணைக்கட்டு எந்நேரத்திலும் உடைபெடுக்கலாம் என கம்பளை மற்றும் கண்டியில் வாழும் மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், அணைக்கட்டுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என்றும், இது தொடர்பிலான உண்மையான தகவல்களை மறைப்பதாகவும் பரப்பப்படும் பொய்க் குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
சாதாரண வானிலையால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்த அமைச்சர் மீண்டும் ஒரு சூறாவளி ஏற்பட்டால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என சுட்டிக்காடிட்யுள்ளார்.
