Home இலங்கை சமூகம் அநுர அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்! தென்னாபிரிக்க தூதரிடம் கஜேந்திரகுமார் வலியுறுத்து

அநுர அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்! தென்னாபிரிக்க தூதரிடம் கஜேந்திரகுமார் வலியுறுத்து

0

வடக்கில் காணி அபகரிப்பு நோக்கத்திற்காக அரசு வெளியிட்ட வர்த்தமானியை உடன்
இரத்துச் செய்ய தென்னாபிரிக்க அரசு இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என எம்பி தென்னாபிரிக்க தூதரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுறுத்தியுள்ளார்.

மேலும்,  குருந்தூர்மலை பகுதியில் நீதிக்குப் புறம்பாக கைது
செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இரண்டு விவசாயிகள் விடுதலை,
தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை அகற்றி
காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் எடுத்துறைத்துள்ளார்.

தென்னாபிரிக்க தூதுவருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம், இடையிலான சந்திப்பு இன்று வியாழக்கிழமை (22) காலை கொழும்பிலுள்ள
தென்னாபிரிக்க தூதரகத்தில் நடைபெற்றது.

6000 ஏக்கர் காணிகள் 

இதன் பின்னர் அவர் ஊடகங்களுக்கு
கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெருவித்தார்.

“கடந்த 2025 மார்ச் மாதம் 28 ஆம் திகதி வெளியிடப்பட்ட வடமாகாணத்தின் சுமார்
6000 ஏக்கர் காணிகளை அரச காணியாக சுவீகரித்து திட்டமிட்ட சிங்கள பௌத்த
மயமாக்கலை மேற்கொள்ளும் கபட முயற்சியில் மூன்று மாத காலத்தில் மக்கள் தமது
காணிகளை உறுதிபடுத்த வேண்டும் என்ற அந்த அடிப்படையில் அரசு வெளியிட்ட குறித்த
வர்த்தமானியை அரசு மீளப் பெறவேண்டும்.

வடகிழக்கு மக்கள் யுத்தகாலத்தில் பலதடவைகள் இடம்பெயர வேண்டிய சூழல் ஏற்பட்டது
அவ்வாறான சந்தர்ப்பங்களில் அவர்களின் சொந்தமான ஆவணங்கள் அழிவடைந்தும்
தொலைந்துமுள்ளன.

சாத்தியமற்ற விடயம்

அத்துடன் சுனாமி மூலம் எமது மக்கள் சொத்துக்கள் ஆவணங்களை
இழந்தார்கள். ஆகவே ஆவணங்கள் மூலம் உறுதிபடுத்துவது சாத்தியமற்ற விடயம்.

அத்துடன் போர் காரணமாக தமிழீழ மக்களின் சனத்தொகை பெருமளவில்
புலம்பெயர்ந்துள்ளது.

இந்த மக்கள் பயங்கரவாதச் சட்ட அச்சுறுத்தல் காரணமாகவும்
நாட்டினை விட்டு வெளியேறினார்கள்.

எனவே இவர்களின் நோக்கம் மக்களின் காணி பிரச்சினைகளை தீர்ப்பது இல்லை. மாறாக
மக்களின் ஆவணங்களற்ற காணிகளை அரச காணிகளாக சுவீகரிப்பதே இவர்களது நோக்கமாக
உள்ளது” எனவும் கூறியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version