Home இலங்கை சமூகம் சீஷெல்ஸ் தீவுகளின் சட்டமா அதிபராக இலங்கையர் நியமனம்

சீஷெல்ஸ் தீவுகளின் சட்டமா அதிபராக இலங்கையர் நியமனம்

0

சீஷெல்ஸ் தீவுகளின் புதிய சட்டமா அதிபராக இலங்கையைச் சேர்ந்த ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த வின்சென்ட் பெரேரா என்பவரே சீஷெல்ஸ் தீவுகளின் சட்டமா அதிபராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.

கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டம் பட்டம் பெற்ற வின்சென்ட்  பெரேரா, இலங்கையின் உயர்நீதிமன்றத்திலும் சிறிது காலம் சட்டத்தரணியாக பணியாற்றியுள்ளார்.

சட்ட ஆலோசகர்

அத்துடன் பிஜி மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலும் சட்டத்துறையில் பணியாற்றியுள்ள அவர் சீஷெல்ஸின் சட்டமா அதிபர் அலுவலகத்தில் சிவில் வழக்குகளில் சட்ட ஆலோசகராகவும் கடமையாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version