Home இலங்கை சமூகம் விசர்நாய்க் கடிக்கு இலக்கான சிறுமி பரிதாப மரணம் : கிளிநொச்சியில் சோகம்

விசர்நாய்க் கடிக்கு இலக்கான சிறுமி பரிதாப மரணம் : கிளிநொச்சியில் சோகம்

0

விசர்நாய்க் கடிக்கு இலக்கான சிறுமியொருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Teaching Hospital Jaffna) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிளிநொச்சி (Kilinochchi) – குமாரசாமிபுரத்தைச் சேர்ந்த நான்கு வயது சிறுமியே நேற்றையதினம் (26) இவ்வாறு உயிரிழந்துள்ளார்

யாழ் போதனா வைத்தியசாலை

குறித்த சிறுமி விசர்நாய்க் கடிக்கு இலக்கான நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் சிறுமி நேற்றையதினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

Source: https://ibctamil.com/article/little-girl-dies-bitten-by-a-dog-in-kilinochchi-1719460367

NO COMMENTS

Exit mobile version