Home இலங்கை அரசியல் உள்ளூராட்சி மன்ற தேர்தல்: மக்களின் வாக்கு தொடர்பில் டக்ளஸ் கருத்து

உள்ளூராட்சி மன்ற தேர்தல்: மக்களின் வாக்கு தொடர்பில் டக்ளஸ் கருத்து

0

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால அனுபவங்களை கருத்தில் கொண்டு
வாக்களிப்பார்கள் என முன்னாள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) தெரிவித்துள்ளார்.

மன்னார் பிரதேச சபைக்கான கட்டுப்பணத்தை இன்றைய தினம்(25.03.2025) தேர்தல்
அலுவலகத்தில் செலுத்திய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர்
மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “உள்ளூராட்சி மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி மன்ற தேர்தல் 

இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மன்னார் மக்கள் தமது கடந்த கால
அனுபவங்களை கருத்தில் கொண்டு, தமக்கு சேவையாற்ற கூடியவர்களை அடையாளம்
கண்டு,சரியானவர்களை மக்கள் தெரிவு செய்வார்கள் என்று நான் நம்புகின்றேன்.

அந்த வகையில் கட்சியின் மாவட்ட முக்கியஸ்தர்களுடன் சென்று மன்னார் பிரதேச
சபைக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளேன்.

இந்தமுறை மன்னார் மாவட்டத்தில் இரண்டு சபைகளிலே போட்டியிட உள்ளோம்.

வேட்பு மனு

எதிர்வரும் காலங்களில் கடந்த காலத்தை போல மன்னார் மாவட்டத்தில் அனைத்து
சபைகளிலும் போட்டியிட்டு அனைத்து சபைகளையும் கைப்பற்றுவோம்.

யாழ் .மாவட்டத்தில் அனைத்து சபைகளுக்கும் வெற்றிகரமாக வேட்பு மனு தாக்கல்
செய்துள்ளோம்.”என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version