Home இலங்கை குற்றம் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளரின் மரணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளரின் மரணம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

0

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், “கட்டுகஸ்தோட்டை, மஹய்யாவ பகுதியில் உள்ள ரத்வத்தவின் அலுவலகத்திற்கு அருகில் உள்ள கட்டிடத்தில் 50 வயதுடைய நபர் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் காணப்பட்டார்.

வைத்தியசாலையில் அனுமதி 

பின்னர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தார்.

குறித்த அலுவலகத்தில் தான் ரத்வத்தவின் பிரத்தியேக செயலாளர் கடமையாற்றியதுடன், அவருக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ துப்பாக்கியால் அவர் தன்னைத்தானே சுட்டு கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.

உயிரிழந்தவர் வெரல்லகம பகுதியைச் சேர்ந்த 50 வயதுடையவர்.

சம்பவம் தொடர்பில் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்” என விளக்கமளித்துள்ளார். 

you may like this

NO COMMENTS

Exit mobile version