வெளிநாட்டுப் பிரஜைகள் பயணித்த சொகுசு வான் ஒன்று முன்னால் சென்ற சிறிய லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
தெற்கு அதிவேக வீதியில் 168 கிலோமீட்டர் மைல் கல் பகுதிக்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்து நேற்று (15) மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.
விஷேட அதிரடிப்படை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், இந்த விபத்தில் வேனில் பயணித்த இரண்டு வெளிநாட்டுப் பெண்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விபத்தின் போது லொறியின் ஒரு பாகம் உடைந்து அதிவேக வீதியின் வெளியே வீசப்பட்டுள்ளது.
காயமடைந்தவர்கள் தெற்கு அதிவேக வீதியில் நிறுத்தப்பட்டிருந்த காவல்துறை விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்த நோயாளர் காவு வண்டி மூலம் தங்காலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
