Home இலங்கை அரசியல் விடுதலைப் புலிகள் தப்பிச்செல்ல வாய்ப்பளித்த மகிந்த : சரத் பொன்சேகா பகிரங்கம்

விடுதலைப் புலிகள் தப்பிச்செல்ல வாய்ப்பளித்த மகிந்த : சரத் பொன்சேகா பகிரங்கம்

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

2009 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து பிரபாகரனுக்கும் ஏனைய தலைவர்களுக்கும் தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்க முயற்சித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஜா-எல பகுதியில் நேற்று (1) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சிறைத் தண்டனை 

இதேவேளை மகிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோது நிகழ்த்தியதாகக் கூறப்படும் பெரும் அளவிலான ஊழலுக்காக, அவருக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா அண்மையில் கருத்து வெவளியிட்டிருந்தார்.

அத்துடன் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தன்னை அரசியலுக்குள் கொண்டுவந்தவர் எனவும் அவருடைய நிலை தனக்கு வருத்தமளிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

NO COMMENTS

Exit mobile version