Home இலங்கை அரசியல் அரசியல் பழிவாங்கலால் இரத்து செய்யப்பட்டதா மகிந்தவின் சிறப்புரிமை

அரசியல் பழிவாங்கலால் இரத்து செய்யப்பட்டதா மகிந்தவின் சிறப்புரிமை

0

அரசியல் பழிவாங்கலின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்ட எந்தவொரு சலுகைகளும் நீக்கப்பட்டாலும் எந்தப் பிரச்சினையும் இருக்காது என்று மகிந்த கூறியுள்ளார்.

மக்களால் வழங்கப்படும் சலுகை

மக்களால் வழங்கப்படும் சலுகைகளை விட மதிப்புமிக்கது எதுவுமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அது இருக்கும் வரை, எந்தவொரு சலுகையும் நீக்கப்பட்டாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 9ஆம் நாள் திருவிழா

NO COMMENTS

Exit mobile version