Home முக்கியச் செய்திகள் சீனா பறந்தார் மகிந்த ராஜபக்ச : உயர் மட்ட பேச்சுக்களில் பங்கேற்பு

சீனா பறந்தார் மகிந்த ராஜபக்ச : உயர் மட்ட பேச்சுக்களில் பங்கேற்பு

0

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று(27) காலை சீனா சென்ற முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa), அங்கு தங்கியிருக்கும் போது சீனப் பிரதமர் லீ கியாங்(Li Qiang) மற்றும் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ (Wang Yi)ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பெய்ஜிங்கில் அமைதியான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் நினைவேந்தல் நிகழ்வுகளில் கலந்து கொள்ள சீன அமைச்சர் வாங் யீ விடுத்த அழைப்பின் பேரில் ராஜபக்சவின் விஜயம் அமைந்ததாக தகவல்கள் தெரிவித்தன.

சீன வெளியுறவு அமைச்சர் அழைப்பு

நினைவு நிகழ்வுகளில் சீன அதிபர் ஜி ஜின்பிங்(Xi Jinping), பிரதமர் லீ கியாங், வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் இதர முன்னணி சிபிசி உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நிகழ்வுகளின் ஒருபுறம், மகிந்த ராஜபக்ச, பிரதமர் லீ கியாங் மற்றும் அமைச்சர் யீ ஆகியோருடன் பரஸ்பர முதலீடுகள் மற்றும் இலங்கைக்கு நன்மை பயக்கும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்து கலந்துரையாடுவார்.

சீனாவின் எக்சிம் வங்கி

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் குறித்தும் ராஜபக்ச விவாதிப்பார் மற்றும் சீனா மற்றும் சீனாவின் எக்சிம் வங்கி அளித்த உதவிக்கு தனது நன்றியைத் தெரிவிப்பார்.

சிங்கப்பூர் வழியாக பெய்ஜிங் சென்ற ராஜபக்ச, ஜூலை 1ஆம் திகதி நாடு திரும்புகிறார்.

NO COMMENTS

Exit mobile version