Home இலங்கை அரசியல் வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

வாடகை வீட்டுக்கு சென்ற மகிந்த ராஜபக்ச!

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தற்போது கொழும்பு, நுகேகொடை பகுதியில் உள்ள வீடொன்றில் வாடகைக்கு தங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதிகளுக்கான உத்தியோகபூர்வ இல்ல வசதியை அரசாங்கம் இரத்து செய்த பின்னர், அதுவரை விஜயராவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்த மகிந்த ராஜபக்ச, செப்டம்பர் 11 ஆம் திகதியன்று வீட்டை விட்டு வெளியேறினார்.

தங்கல்ல இல்லம்

தங்கல்ல பகுதியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்த பின்னர் கடந்த வாரம் நுகேகொடை பகுதியில் உள்ள வீடொன்றிற்கு திரும்பியுள்ளார்.

அரசியல் நடவடிக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகளைப் பெறுவதில் உள்ள எளிமையைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடு அவரது நண்பருக்குச் சொந்தமானது எனவும் குத்தகை அடிப்படையில் வாங்கப்பட்டுள்ளதாகவும் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version