Home முக்கியச் செய்திகள் அநுரவுடன் கைகோர்க்க தயாராகும் மலையக கட்சிகள்

அநுரவுடன் கைகோர்க்க தயாராகும் மலையக கட்சிகள்

0

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) மற்றும் அக்கட்சி
முக்கியஸ்தர்களுடன் மலையகத்திலுள்ள பிரதான கட்சியின் பிரமுகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொழும்பில் முகாமிட்டுள்ள மேற்படி கட்சி உறுப்பினர்கள் தேசிய மக்கள்
சக்தியினருடன் நேரடி கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை அடுத்தகட்ட நகர்வுகள் தொடர்பில்
ஆராய்ந்து வருவதாக தெரியவருகின்றது.

மலையகத்திற்கான வேலைத்திட்டங்கள்

மேலும், எதிர்காலத்தில் அமையவுள்ள இடைக்கால அரசு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்
இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் மலையகத்துக்கான வேலைத்திட்டங்கள்
பற்றி ஆராயப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version