Home இலங்கை அரசியல் ஒரு பில்லியன் ரூபா இழப்பீட்டைக் கோரும் மைத்திரி

ஒரு பில்லியன் ரூபா இழப்பீட்டைக் கோரும் மைத்திரி

0

ஊடகங்கள் மூலம் வெளியிட்ட கருத்துக்களினால் ஏற்பட்ட அவமதிப்புக்கு இழப்பீடு வழங்குமாறு முன்னாள் அதிபர் மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena), அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு (Mahinda Amaraweera) கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஏப்ரல் 22 மற்றும் 24 ஆம் திகதிகளில் அமைச்சர் மகிந்த அமரவீர ஊடகங்களுக்கு வழங்கியதாகக் கூறப்படும் கூற்று, மைத்திரிபால சிறிசேன தொடர்பில் தவறான மற்றும் தீங்கிழைக்கும் கருத்துக்களைக் கொண்டிருப்பதாக கோரிக்கைக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சட்ட நடவடிக்கை

மைத்திரிபால சிறிசேனவுக்கு ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு அல்லது இழப்பீட்டுத் தொகையை 14 நாட்களுக்குள் வழங்குமாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட மின்சார சட்டமூலம்!

குறித்த காலப்பகுதிக்குள் நட்டஈடு வழங்கப்படாவிட்டால் மகிந்த அமரவீரவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்: சிறீதரன் வலியுறுத்தல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள். 

NO COMMENTS

Exit mobile version