Home இலங்கை அரசியல் என்னை சிறையில் அடைக்க ஆளுந்தரப்பு கடும் முயற்சி! மைத்திரி தகவல்

என்னை சிறையில் அடைக்க ஆளுந்தரப்பு கடும் முயற்சி! மைத்திரி தகவல்

0

தனது அரசியல் பயணம் ஆளுந்தரப்பினருக்குப் பிடிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (Maithripala Sirisena) தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.  

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், 

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் உண்மைத் தகவல்கள் வெளியானால்
தங்கள் அரசியலுக்கு வேட்டு வைக்கப்படும் என்று ஆளுந்தரப்பினரான மொட்டுக்
கட்சியினர் எண்ணுகின்றனர்.

அரசியல் பயணம்

அதனால் அவர்கள் எனது அரசியல் பயணத்தை முடக்க
முயல்கின்றனர்.என் அரசியல் பயணத்தை எவராலும் தடுக்க முடியாது. நெருக்கடி நிலைமையிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை விரைவில் மீட்டெடுப்பேன்.

சு.க.வின் தலைமையில்
ஆட்சி மலரும் காலம் வெகுதொலைவில் இல்லை” என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Source: https://tamilwin.com/article/maithiri-pala-sirisena-1714831289

NO COMMENTS

Exit mobile version