Home இலங்கை சமூகம் பிரபல சிங்கள நடிகை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

பிரபல சிங்கள நடிகை ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி

0

பிரபல சிங்கள நடிகை மாலினி பொன்சேகா ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையின் சிங்கள சினிமாவின் நடிப்பரசி என மகுடம் சூட்டப்பட்ட மாலினி பொன்சேகா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

புற்று நோய் 

சில காலமாக அவர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார் எனவும் உரிய முறையில் மருத்துவ சிகிச்சைகளை எடுத்துக்கொள்ளத் தவறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நோய் நிலைமை அதிகரித்து தற்பொழுது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மாலினி பொன்சேகா இந்திய திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.   

NO COMMENTS

Exit mobile version