நடிகை மாளவிகா மோகனன் தமிழ், தெலுங்கில் முக்கிய நடிகையாக இருந்து வருகிறார். அவர் அடுத்து தெலுங்கில் பிரபாஸ் உடன் ராஜா சாப், தமிழில் சர்தார் 2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மாளவிகா தற்போது நடுக்காட்டில் ட்ரெண்டியான உடையில் எடுத்த ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அவர் wildlife போட்டோகிராபி எடுப்பதற்காக புலிகள் சரணாலயத்திற்கு சென்றபோது எடுத்த புகைப்படங்கள் தான் அவை.
அவரது அப்பா ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனன் தான் அந்த போட்டோக்களை எடுத்திருக்கிறார். அப்பா சினிமா துறையில் இருப்பதால் மாளவிகா மோகனன் அதிக ஆர்வத்துடன் நடிகையாக களமிறங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் போட்டோகிராபி மீதும் அவருக்கு ஈடுபாடு அதிகம்.
