Home முக்கியச் செய்திகள் கட்டுநாயக்கவில் தமிழர் ஒருவர் கைது!

கட்டுநாயக்கவில் தமிழர் ஒருவர் கைது!

0

சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 10,000 வௌிநாட்டு சிகரெட்டுக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை இன்று காலை (21.07.2025) இடம்பெற்றுள்ளது.

மேலதிக விசாரணை

காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர் வவுனியா பகுதியைச் சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார். 

சம்பவம் தொடர்பில் விமான நிலைய காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

NO COMMENTS

Exit mobile version