Home இலங்கை குற்றம் யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தியவர் கைது!

யாழில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்தியவர் கைது!

0

யாழ்ப்பாணத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி மணல் கடத்திச் சென்ற வானகத்துடன் இன்றையதினம்( 18) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் இந்த
கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 கைது

கைதடி பகுதியில் வைத்து 45 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது
செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரை தற்போது சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில்
தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின்
பின்னர் நாளையதினம்(19) அவரை சாவகச்சேரி நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/man-arrested-for-illegal-sand-mining-in-jaffna-1742307938

NO COMMENTS

Exit mobile version