Home இலங்கை குற்றம் யாழில் கஞ்சா போதைபொருளுடன் ஒருவர் கைது

யாழில் கஞ்சா போதைபொருளுடன் ஒருவர் கைது

0

யாழ்ப்பாணம் (Jaffna) – அராலி வீதி பகுதியில் சந்தேகநபர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த கைது நடவடிக்கை நேற்று (25) முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இ்ந்த கைது இடம்பெற்றுள்ளது. 

நீதிமன்றில் முன்னிலை 

இதன்போது, அராலி வீதி – பொம்மைவெளி பகுதியில் சந்தேகத்தின் கீழ் கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் இருந்து 7கிராம் 500 மில்லிகிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

மேலும், அந்த நபர் அராலி தெற்கு வட்டுகோட்டையை சேர்ந்தவர் எனவும், மேலதிக
விசாரணையின் பின்னர் அவரை நாளை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version