சிலாபம் – காக்கப்பள்ளிய பகுதியில் அனுமதிப் பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபரிடமிருந்து, அனுமதி பத்திரம் இல்லாத கைத்துப்பாக்கி, 3 தோட்டாக்கள்,
202 லீற்றர் சட்டவிரோத மதுபானம் மற்றும் வரி இன்றி கொண்டுவரப்பட்ட
சிகரெட்டுகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
சந்தேகநபர் அக்கரைப்பற்று பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையர் என்று பொலிஸார்
தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
