Home இலங்கை குற்றம் சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை! சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை! சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

0

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சிரம்குடா பெரிய காளை கோட்டை பகுதியில்
இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை இன்று (16) பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸாரை கண்டு உற்பத்தியில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, வாய்க்காலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 17 பரல்கள் கொண்ட 3400 லீற்றர் கோடாவை பொலிஸார் மீட்டுள்ளனர்.

முற்றுகை

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின்
வழிகாட்டலில் பெரும் குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ்
குழுவினர் இன்று பகல் குறித்த பிரதேசத்திலுள்ள வயல் பகுதியை அண்டிய
வாய்க்காலில் இயங்கிவந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதன்போது, வாய்க்கால்
நீரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கோடாவுடனான 17 பரல்களை மீட்டு கோடாவை அங்கு
ஊற்றி அழித்து பரல்களை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து கொண்டு வந்துள்ளதாக
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version