Home இலங்கை குற்றம் யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

0

யாழ்ப்பாணம் (Jaffna) – மாதகல் பகுதியில் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவர் இன்று (27) கைது செய்யப்பட்டுள்ளார்.

இளவாலை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட
சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 52 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணை

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து ஒரு கிலோ 100 கிராம் எடையுடைய கேரள கஞ்சா மீட்கப்பட்டு்ள்ளது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம்
நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/man-arrested-with-ganja-in-mathagal-1737991832

NO COMMENTS

Exit mobile version