Home இலங்கை சமூகம் கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி : மூன்று பெண்கள் அதிரடியாக கைது

கொழும்பில் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி : மூன்று பெண்கள் அதிரடியாக கைது

0

கல்கிஸ்ஸ (Kalkissa) பகுதியில் ஆயுர்வேத நிலையம் என்ற போர்வையில் நடத்தப்பட்ட விடுதியொன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த விடுதியிலிருந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாணந்துறை (Panandura), அநுராதபுரம் (Anuradhapuram) மற்றும் மாத்தளை (Matala) ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் 25 தொடக்கம் 40 வயதுக்குட்பட்ட மூன்று பெண்களே இவ்வாறு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதியின் முகாமையாளர் 

அத்தோடு, விடுதியின் முகாமையாளராக பெண் ஒருவர் செயற்பட்டு வந்த நிலையில், அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவிற்கமைய இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version