முல்லேரியாவ, பாரோன் ஜெயதிலக மாவத்தை பகுதியில் துப்பாக்கி மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வெளிநாட்டு துப்பாக்கி
கைது செய்யப்பட்ட நேரத்தில், சந்தேக நபரிடம் இருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிஸ்டல் ரக துப்பாக்கி,
9 தோட்டாக்கள், ஒரு மெகசின் மற்றும் சுமார் 13 கிராம் ஐஸ் போதைப்பொருள் ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.
சந்தேக நபர் வெபாடா பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கண்டுபிடிக்கப்பட்ட துப்பாக்கி ஏதேனும் குற்றச்செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.
